கடன் இ.எம்.ஐ செலுத்துவது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யாததற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ``வங்கிக்கடன் விவகாரங்களில் ரிசர்வ் வங்கியின் பின்னால் ஒளிந்து கொள்வதையே வழக்கமாக கொண்டுள்ளீர்கள்” என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், உங்கள் வேலையை செய்யும் நேரம் இது அல்ல, தேவையான நிவாரணத்தை வழங்குவது அவசியம்” என்றது.